தனியார் பேருந்து மோதி ரயில்வே ஊழியர் பலி.!!அசுர வேகத்தால் வந்த வினை!!

 
மோகன்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து வழக்கம் போல் நேற்று காலை 7 மணியளவில் மத்திய பேருந்து நிலையத்திற்கு தனியார்கள் இயக்கப்பட்டன. காலை நேரம் என்பதால் தனியார் பேருந்துகள் போட்டிபோட்டு பாய்ந்தன. இந்த நிலையில், ஒரு தனியார் பேருந்தை ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் ஓட்டி வந்தார் தலைமை தபால் நிலையம் வரும் போது ஜங்ஷன் நோக்கி சென்ற மற்றொரு தனியார் பேருந்துடன் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக சென்றது.

ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது சுந்தராஜன் ஓட்டி வந்த பேருந்து, அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தண்ணீர் குடத்துடன் நடந்து சென்ற ரயில்வே ஊழியரான மோகன் (35) என்பவர் மீது மோதியது. அதோடு பாய்ந்து சென்ற தனியார் பேருந்து அருகில் இருந்த பெட்ரோல் பங்க் முகப்பில் இருந்த டிராபிக் லைட் போஸ்ட் மீது மோதி நின்றது. 

மோகன்

இந்த விபத்தில் ரயில்வே ஊழியர் மோகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் காயமடைந்தனர். இந்த விபத்தை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், பஸ் டிரைவர் சுந்தர்ராஜனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் ஆத்திரம் அடங்காத அவர்கள், பேருந்து கண்ணாடியையும் அடித்து நொறுக்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மோகன்

இதுகுறித்து கண்டோன்மென்ட் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து தனியார் பேருந்து டிரைவர் சுந்தர்ராஜனை (41) கைது செய்ததோடு, பேருந்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web