பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்!

 
காங்கிரஸ்

இந்தியாவில் 2010- 2011ம் ஆண்டில் கடைசியாக  மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.  2020-21-ல்  கொரோனா பெருந்தொற்று காரணமாக அந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியவில்லை.  அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணி கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. 

காங்கிரஸ்


இதையடுத்து, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கடந்த 2 நாட்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்தது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை  கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உட்பட  பல்வேறு  அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. 

காங்கிரஸ்

இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மத்திய அரசின் முடிவு பற்றி விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web