ரயிலில் இருந்து தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி பலி!

 
 ரயிலில் இருந்து தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி பலி!  

தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் வசித்து வருபவர்கள்  10க்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்கள். இவர்கள்  விருதுநகர் மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாக  கட்டிடப்பணியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து நேற்று பணி முடிந்து சொந்த ஊருக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தனர். 
அப்போது அவர்கள் வந்த ரயில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திபலகானூர் அருகே வந்த போது, ரயிலில் பயணம் செய்த நபர் ஒருவர் தவறி விழுந்ததாக பயணி ஒருவர் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.  
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனார். ஆதில், அவர், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சங்கர் (40) என்பதும் இவர், நண்பர்கள், உறவினர்களுடன் பணிக்கு சென்று விட்டு ரயில் படிக்கட்டில் பயணம் மேற்கொண்ட போது தவறி விழுந்ததும் தெரியவந்தது. 
இதனையடுத்து சேலம் ரயில்வே காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web