சமையல் மாஸ்டர் கழுத்து, தோள்பட்டையில் காயங்களுடன் மர்ம மரணம்!

தமிழகத்தில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நொச்சிகுளம் கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தர் ஐயா. இவரது மகன் சிவகுமார். இவர், அதே பகுதியில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர், இன்று காலை மர்மமான முறையில் வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிவகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிவகுமாரின் கழுத்து மற்றும் தோள்பட்டையில் சிறு சிறு காயங்கள் இருப்பதால் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.
சங்கரன்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்து கிடந்த சிவகுமாரின் அருகில் மது பாட்டில்கள் இருந்ததாகவும் அதனை ஆய்வுக்காக அனுப்பி வைத்திருப்பதாகவும் விசாரணை முடிவில் தான் அடுத்தடுத்த தகவல்கள் தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!