பொதுமக்களே உஷாரா இருங்க... மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா... இருவர் பலி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு இருவர் பரிதாபமாக பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020 ல் உலகையேப் புரட்டிப்போட்ட கொரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.தொடர்ந்து 2 வருடங்கள் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் முடங்கியது. சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

இதையடுத்து, இந்தியாவில் கொரோனா நிலைமையைச் சுகாதார அமைச்சகம் ஆய்வு செய்து வருகின்றது.
இந்நிலையில், மகாராஷ்டிரத்தின் மும்பையில் ஜனவரி மாதத்திலிருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருவர் பலியாகி இருப்பதாக மருத்துவமனை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு ஹைபோகால்சீமியா வலிப்புடன் கூடிய நெஃப்ரோடிக் நோயும், மற்றவருக்கு புற்றுநோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

ஜனவரி முதல் மொத்தம் 6,066 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதிக்கப்பட்டதாகவும், அவற்றில் 106 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 101 பேர் மும்பை, புனே, தாணே மற்றும் கோலாப்பூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். தற்போது 52 பேர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளதாகவும் அவர்களின் உடல்நலத்தை கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
