தீயாய் பரவும் கொரோனா!! ஒரே நாளில் புதிதாக 12193பேருக்கு பாதிப்பு!! 42 பேர் பலி!!

 
கொரோனா

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அச்சம் தருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.மேலும் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா

இது குறித்து  சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,81,877 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,300 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 10,765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா

இதன்மூலம் இதுவரை 4,42,83,021 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 67,556 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 1,97,477 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 92,52,74,799 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் என மத்திய  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 220.66 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web