கோரதாண்டவம் ஆடும் கொரோனா!! ஒரே நாளில் 10158 பேருக்கு பாதிப்பு உறுதி!!
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன. இருந்த போதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,158 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 7830 ஆக இருந்த நிலையில், இன்று 10,158 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக 19 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 44,998 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் ஒரே நாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,692 பேர் .
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் மீண்டும் தனது உற்பத்தியை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மீண்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க தொடங்க வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளி , அடிக்கடி கை கழுவுதல் இவைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கவும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!