மாநகராட்சி பள்ளி ஆசிரியைக்கு சாதனையாளர் விருது!

 
சபிதா
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிரியைக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜாக்கி உலக சாதனை புத்தகத்தின் வருடாந்திர சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழா சீர்காழியில் நடைபெற்றது. இதில் உலக சாதனை புரிந்தவர்கள் மற்றும் பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

இதில் தூத்துக்குடி ஜின் பாக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை சபிதாவுக்கு கல்வித் துறையில் பல்வேறு சாதனைகளையும், பல ஆண்டுகளாக திறமையான மாணவர்களை உருவாக்கி வருவதையும் பாராட்டி இந்த ஆண்டின் சிறந்த 100 பெண்மணிகளில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியன் ஐகானிக் பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

மேலும் கருத்தாளராகவும் ஆசிரியராகவும் இவரது கற்பித்தல் திறனை பாராட்டி முன்மாதிரி ஆசிரியை என்ற கோல்டு ஸ்டார் விருதும் வழங்கி  சிறப்பிக்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web