ஏப்ரல் 22 முதல் 10ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்!

 
விடைத்தாள் திருத்தும் பணி

 

தமிழகத்தில் மாநில வழிக் கல்வி பயிலும் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. அந்த வகையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி மார்ச் 27ம் தேதி முடிவடைந்தது. 

தேர்வு தாள்கள் திருத்தும் பணி

இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் 83 மையங்களில் விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஏப்ரல் 4ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9ம் தேதியும், மே 19ம் தேதியும் வெளியாக உள்ளது. 

இதனை தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வினை 12,480 பள்ளிகளில் படித்த 4,46, 411 மாணவர்களும், 4,40,465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9,13,036 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்கு தேர்வு எழுத 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவர்களுக்கான தேர்வு பணியினை கண்காணிக்க 4858 பறக்கும் படைகளும் 48,426 தேர்வு வரை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

விடைத்தாள்கள் திருத்தும் பணி

இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 8 நாட்கள் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறுகின்றன. அதன் பின்னர் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட மற்ற பணிகளை முடித்து, திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிடப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு பொதுத்தேர்வு மாணவர்கள் அதிகாரப்பூர்வ www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி இவைகளை கொண்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web