விஜய் பட நடிகைக்கு பிடிவாரண்ட்!! பரபரக்கும் திரையுலகம்!!

 
அமீஷா படேல்

பிரபல இந்தி நடிகை அமீஷா படேல். இவர் தமிழில் 2003ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘புதிய கீதை’படத்தில் நடித்துள்ளார். இந்தியில் தொடர்ந்து நடித்த அவர் சில படங்களைத் தயாரித்தும் உள்ளார்.இந்த நிலையில், பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான அஜய் சிங், கடந்த 2013ஆம் ஆண்டு மீயூசிக் ஆல்பம் ஒன்றை தயாரிப்பதாக கூறி பாலிவுட் நடிகை அமீஷா படேலுக்கு பணம் கொடுத்தார். ஆனால் குறிப்பிட்ட நாளில் மியூசிக் ஆல்பம் தயாரிக்கப்படவில்லை. எனினும் ஆல்பம் தயாரிப்போம் எனக்கூறி நாட்களை இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. 

நடிகை அமீஷா படேல்

இதற்கிடையே  ஆல்பம்  தயாரிக்கவில்லை என்பதால், தான் கொடுத்த பணத்தை அமீஷா படேலிடம் அஜய் சிங் கேட்டார். ஆனால் பணத்தை தராமல் நடிகை அமீஷா படேல் இழுத்தடித்து வந்தார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரண்டரை கோடி ரூபாய்க்கான காசோலையை கொடுத்தார்.

ஆனால் நடிகை அமீஷா படேல் வழங்கிய அந்த செக் ரிட்டன் ஆனது. இதற்கிடையே அமீஷா படேலின் கூட்டாளி குணால் கூமர் என்பவர், தயாரிப்பாளர் அஜய் சிங்குக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பணமும் கொடுக்காமல் மிரட்டல் விடுப்பதால் ஆத்திரம் அடைந்தார்.

நடிகை அமீஷா படேல்

பின்னர் இது குறித்து நடிகை அமீஷா படேல் மற்றும் அவரது கூட்டாளி மீது ராஞ்சி நீதிமன்றத்தில் அஜய் சிங் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் அமீஷா படேல் இருந்து வந்தார். அதனால் அமீஷா படேல் மற்றும் அவரது கூட்டாளி குணால் ஆகியோருக்கு எதிராக ராஞ்சி சிவில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 15ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web