நகைக் கடைகளில் குவிந்த கூட்டம்... அட்சய திருதியை தினத்தில் 20% விற்பனை அதிகரிப்பு!

 
தங்கம்

நேற்று அட்சய திருதியை தினம் என்பதால் பலரும் நகைகளை வாங்க முன்பதிவு செய்திருந்த நிலையில், நேற்று நகைகளை வாங்குவதற்காக சென்னையில் உள்ள நகைக்கடைகளில் கூட்டமாக குவிந்தனர்.  தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்ட போதிலும், அட்சய திருதியை தினத்தன்று வழக்கத்தை விட அதிகமாகவே நகைக் கடைகளில் விற்பனை களைகட்டியது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் தங்கம் விற்பனை அட்சய திருதியையன்று 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம்

சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு 3-வது நாளில் வரும் வளர்பிறை திதி அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் ஐதீகமும் மக்களிடம் உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று முன்தினம் இரவு 8.40 மணிக்குத் தொடங்கி நேற்று மாலை 6.45 மணி வரை நீடித்தது.

இதனால், வாடிக்கையாளர்களை கவர, நகைக் கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்தன. இதன்படி, தங்க நகைகள் பவுனுக்கு ஆயிரம் ரூபாய் வரையும், வைர நகைகள் காரட்டுக்கு ரூ.15 ஆயிரம் வரையிலும், வெள்ளி கிலோ ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரையும் தள்ளுபடி வழங்கப்பட்டது. சில கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைககளுக்கு செய்கூலி, சேதாரம் தள்ளுபடியும் வழங்கின. அத்துடன், புதிய புதிய டிசைன்களில் நகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், 10 நாட்களுக்கு முன்தாகவே முன்பதிவும் தொடங்கப்பட்டது.

தங்கம் நகைக்கடை

வாடிக்கையாளர்களுக்கு நகைக் கடை நிர்வாகம் சார்பில் பழரசம், மோர், தர்ப்பூசணி பழம் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்கள் சாப்பிட வழங்கப்பட்டன. அட்சய திருதியை முன்னிட்டு தங்க நாணயங்கள் வாங்க வந்தவர்களுக்கு சிறப்புக் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web