கொடூரம்.. பிறந்த நாள் கேக் ஊட்டி விட்டு காதலியைக் கழுத்தறுத்து கொலைச் செய்த காதலன் !

 
நவ்யா

கர்நாடகா மாநிலம் பெங்களூரு லாகரேயில் நவ்யா (24) என்ற இளம்பெண் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் காவல் துறையின் உள் பாதுகாப்பு பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இளம்பெண் நவ்யா, கடந்த 6 ஆண்டுகளாக பிரசாந்த் என்பவரை காதலித்து வந்தார். 

காதலர்களான நவ்யாவும் பிரஷாந்தும் தூரத்து உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை நவ்யாவின் பிறந்தநாள். அன்று பிஸியாக இருப்பதாக பிரசாந்த் கூறியதால், இளம்பெண் நவ்யா தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நேற்று (ஏ.14) மாற்றினார்.

நவ்யா

அதன்படி பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு திட்டமிட்டு, இரவில் கேக் தயார் செய்து கேக் ஊட்டிவிட்டார். அப்போது சிறிதும் எதிர்பார்க்காத நேரத்தில், பிரசாந்த் தான் தயாராக வைத்திருந்த கத்தியால் நவ்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதனை பார்த்த உறவினர்கள் சிதறி ஓடினர். 

நவ்யா

பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நவ்யாவின் உடலை மீட்டனர். மேலும் பிரசாந்தை கைது செய்து தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. காதல் நவ்யா மீது பிரசாந்த் சந்தேகம் அடைந்துள்ளளார். இவர் வேறு யாரிடமாவது அரட்டை அடிப்பதாக பிரசாந்த் சந்தேகப்பட்டார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தற்போது, சந்தேகத்தின் பேரில், பிறந்தநாளை கொண்டாடிய பின், கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web