கொடுமை... 4 பேருமே 20 வயசுக்குள் தான்... 23 கிலோ கஞ்சா கடத்தி சென்ற 4 இளைஞர்கள் கைது!

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது தலைமையில் சார்பு ஆய்வாளர் செந்தில்வேல்முருகன் மற்றும் போலீசார் நேற்று (ஏப்.27) மூப்பன்பட்டி சுடுகாட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒரு காரை சோதனை செய்ததில் அதில் கோவில்பட்டி கழுகாசலபுரம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் மகன் அருண்குமார் , கயத்தாறு நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் கொம்பையா பாண்டியன் (20), கயத்தாறு தெற்கு கோனார்கோட்டை பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் மகாராஜா (19) மற்றும் கோவில்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்த குருநாதன் மகன் கார்த்திக் (20) ஆகியோர் என்பதும் விற்பனைக்காக காரில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக போலீசார் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 23 கிலோ 720 கிராம் கஞ்சா, ஒரு கார் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!