கொடூரம்... எப்பவும் அவங்க கூட தான் விளையாடிட்டு இருப்பா... எப்படி தான் மனசு வந்ததோ... குழந்தையில்லாததால எதிர் வீட்டு சிறுமியை நரபலி கொடுத்த கணவன்!

 
சிறுமி நரபலி

‘எப்பவுமே அங்கிள், ஆண்ட்டின்னு அவங்க வீட்ல தான் விளையாடிக்கிட்டு இருப்பா. அத்தனை துருதுருன்னு அவங்களோட பேசிக்கிட்டு இருப்பா. அவங்க மேல அத்தனை ப்ரியமா இருந்தா. படுபாவி எப்படி தான் கொல்றதுக்கு மனசு வந்ததோ... கொல்லும் போது அந்த சின்னஞ்சிறு பெண் என்னவெல்லாம் யோசிச்சாளோ... இப்படி நம்பிக்கை துரோகம் பண்ணிட்டானே? பச்சை மண்ணை இப்படி மிதிச்சவனுக்கு எப்படி குழந்தை பொறக்கும்?’ என்று கொல்கத்தாவின் திரும்பிய பக்கம் எல்லாம் வசைப்பாடுகிறார்கள். இப்படி  கொடூர  மனசோட இருக்கிறவங்களால தான் காளி அத்தனை உக்கிரமாகவும், கல்கத்தாவை, ‘கொல்’கத்தாவாகவும் பெயர் மாற்றினார்களோ என்கிற அளவுக்கு கொடூர எண்ணத்துடன், தன்னுடைய வீட்டில் அத்தனை ஆசையாய் பழகி விளையாடி வந்த எதிர் வீட்டு 7 வயது சிறுமியை, தன்னுடைய மனைவிக்கு அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டதால், வீணாய் போன ஒரு மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு நரபலி கொடுப்பதற்காகக் கொலை செய்திருக்கிறான் அலோக் குமார். 

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் ஸ்ரீதர் ராய் சாலையில் வசித்து வந்த 7 வயதுடைய சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வீடு  முழுக்க தேடிப் பார்த்தாயிற்று.. வழக்கமாக சிறுமி செல்லும் இடங்களிலும் தேடிப் பார்த்து விட்டோம். எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று கண்ணீருடனும், படபடப்புடனும் புகார் மனுவை எழுதி கொடுத்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 7 வயது சிறுமியைத் தீவிரமாகத் போலீசார் தேடி வந்தனர். 

சிறுமி அடிக்கடி பக்கத்து வீட்டில் வசிக்கும் அலோக் குமார் வீட்டில் விளையாடிக் கொண்டிருப்பாள். அலோக்குமாரும், அவருடைய மனைவியும் கூட, சிறுமியை பல இடங்களில் தேடிக் கொண்டிருந்தார்கள். அந்த அபார்ட்மெண்ட் முழுக்க போலீசார் ஜல்லடைப் போட்டு சிறுமியை தேடிக் கொண்டிருந்தனர். ஏதோ பொறி தட்ட, சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்த அலோக் குமாரின் வீட்டை காவல் அதிகாரிகள் சோதனை செய்தார்கள்.

அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அலோக் குமாரின் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு சாக்கு மூட்டையில் இருந்து சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடனே சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Kolkatta

மேலும், குற்றம் சாட்டப்பட்ட அலோக்  குமாரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், விஷயம் கேள்விப்பட்டு உள்ளூர் மக்கள் தில்ஜாலா காவல் நிலையத்தின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டதால், தெற்கு கொல்கத்தா போர்க்களமாக மாறியது. அதனால் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. காவல் அதிகாரிகள் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர். சூழல் மோசமடைந்ததைத் தொடர்ந்து, விரைவு அதிரடிப்படையும் (RAF) பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், “அலோக் குமாரின் மனைவிக்கு மூன்று முறை அடுத்தடுத்து தொடர்ந்து கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. இது மாதிரி அடிக்கடி நடப்பதால், பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் அவருக்கு மந்திரவாதி ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். அவரிடம் தன் குடும்பப் பிரச்னை குறித்து பேசியதும், ‘ஒரு குழந்தையை நரபலி கொடுத்தால் உனக்குக் குழந்தை கிடைக்கும்’ என்று கூறியிருக்கிறார். 

அதை நம்பியதால், பக்கத்து வீட்டுச் சிறுமியைக் கடத்தி கொலைச் செய்திருக்கிறார். உடலை மந்திரவாதியிடம் எடுத்துச் செல்ல மூட்டைக் கட்டி வைத்திருந்ததாகவும் போலீசாரின் விசாரணை ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும், விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web