கொடூரம்... இரும்புகேட்டில் மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொல்ல முயற்சித்த கணவன்!

 
முருகன்
வேலூர் மாவட்டம் காட்பாடி  எல்.ஜி.புதூரில் வசித்து வருபவர்  முருகன். 48 வயதாகும் இவர் போர்வெல் மோட்டார் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.  இவரது மனைவி 45 வயது அன்பழகி.  இவர்களுக்கு திருமணமாகி 28 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில்  மனைவியின் நடத்தையில் முருகனுக்கு சந்தேகம் இருந்ததாக தெரிகிறது. 

 மின்சாரம்
இவர் மது போதையில் அடிக்கடி மனைவியை அடித்தும் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதே போல் ஏற்கனவே 2 முறை மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய முருகன் 3 வது முறையாக மனைவியை கொல்ல முயற்சித்து, வீட்டு இரும்பு கேட்டில் மின்வயரை பொருத்தி தரையில் தண்ணீரை ஊற்றிவிட்டு சுவிட்ச் ஆன் செய்துவிட்டார். 

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

இதன் பிறகு  ஒன்றும் நடக்காதது போல் கேட்டை திறக்கும்படி மனைவி அன்பழகியை அழைத்துள்ளார். இதையறியாத அன்பழகி கதவை திறக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.  சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அன்பழகியை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  தீவிர சிகிச்சைக்கு பிறகு  தற்போது வீடு திரும்பி உள்ள மனைவி அளித்த புகாரின் பேரில்  காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து  முருகனை கைது செய்து  வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web