வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி... செல்போன் ரீசார்ஜ் கட்டணம் மீண்டும் உயர்கிறது!

வரவிருக்கும் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பிரபல தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா போன்ற நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணங்கள் கடந்தாண்டு ஜுலை மாதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீண்டும் கட்டணங்களை அதிகரிக்கத் தயாராகி வருகின்றன.
வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் செல்போன் நிறுவனங்கள் 10% -20% வரை செல்போன் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் மிகவும் அதிகமாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் புலம்பும் நிலையில், மீண்டும் ரீசார்ஜ் கட்டணங்கள் உயரவுள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!