இல்லத்தரசிகளே உஷார்... 22 கிலோ சிலிண்டர்... உள்ளே வெறும் தண்ணீர் தான்.... அதிர்ச்சி வீடியோ!
சமையல் எரிவாயு விலை உயர்வால் பொதுமக்கள் ஏற்கனவே அவதிப்பட்டு வரும் நிலையில் சிலிண்டருக்குள் எரிவாயுவிற்குப் பதிலாகத் தண்ணீர் நிரப்பப்பட்டு விநியோகம் செய்யப்படும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. வீட்டு உபயோகத்திற்காக விநியோகம் செய்யப்பட்ட சிலிண்டர் ஒன்றின் எடை வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அதனைச் சோதனை செய்துள்ளனர். அப்போது சிலிண்டரின் வால்வைத் திறந்தபோது எரிவாயு வருவதற்குப் பதிலாகத் தண்ணீர் பீய்ச்சி அடித்ததைக் கண்டு அவர்கள் உறைந்து போயுள்ளனர்.
"Water in LPG cylinder." 🔥😡
— Mission Ambedkar (@MissionAmbedkar) March 29, 2026
Corruption is at such a high level that gas agency managers are supplying water-filled cylinders to people. The government is still inactive and doing nothing against this loot. pic.twitter.com/SA8mPusfPb
சாதாரண எடையை விட கூடுதலாக 22 கிலோ வரை காட்டிய அந்தச் சிலிண்டரின் மோசடி அம்பலமானதைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எரிவாயுவிற்குப் பதிலாகத் தண்ணீரை நிரப்பி எடையை அதிகரித்து நுகர்வோரை ஏமாற்றும் இந்தச் செயல் வெறும் ஏமாற்று வேலை மட்டுமல்லாமல் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. இத்தகைய முறைகேடுகள் எதிர்பாராத விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலிண்டர் வாங்கும்போது அதன் எடையைத் துல்லியமாகச் சரிபார்ப்பதுடன் அதன் மூடி சரியாக உள்ளதா என்பதையும் உறுதி செய்த பின்னரே பெற்றுக் கொள்ள வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன. சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் அரங்கேறியுள்ள இந்தத் துணிச்சலான மோசடி நுகர்வோர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
