திமுக முன்னாள் அமைச்சர் நாசர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி! தொண்டர்கள் அதிர்ச்சி!

 
நாசர்

தமிழகத்தில்  முதல்வராக ஸ்டாலின்  பொறுப்பேற்ற போது பால்வளத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் நாசர். இவர் அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட பிறகு பால்வளத்துறையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டன. இதனையடுத்து முதல்   ஸ்டாலின் அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசரை அதிரடியாக நீக்கி விட்டு டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கினார். பின்னர் பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே நாசர் கலந்து கொண்டு வந்தார்.
 நாசர்
இந்நிலையில் பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை அவரின் உடல்நிலை குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web