மேடையில் இளம்பெண்களுடன் ஆபாச நடனம்... போலீஸ்காரர் சஸ்பெண்ட்!

 
ஆபாச நடனம் ஆபாச நடனம்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் நடந்த ஒரு கிராமத் திருவிழாவில், பெண்களுடன் சேர்ந்து ஆபாச நடனம் ஆடிய காவலர் ஒருவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து, அந்த டிரைவர் காவலரை உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், காங்கிபாடு அருகே உள்ள காந்தி குண்டாவைச் சேர்ந்தவர் அஜய்குமார். இவர் காந்திபாடு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றும் முரளி கிருஷ்ணா என்பவரிடம் டிரைவராக வேலை செய்து வந்தார். ஒரு காவலராகப் பணியில் இருக்கும் இவர், தனது பொது வாழ்க்கையிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலையில் இருந்தார்.

போதையில் பெண்கள் நடனம்

சமீபத்தில் அஜய்குமாரின் சொந்த கிராமமான காந்தி குண்டாவில், கோந்தென்ம்மா திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் ஒரு பகுதியாக, அங்குப் பெண்களின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனம் ஆடியதாகக் கூறப்படுகிறது.

அந்த நேரம், அங்கிருந்த டிரைவர் காவலர் அஜய்குமார், தனது கட்டுப்பாட்டை மீறிச் சட்டென்று மேடையில் ஏறி, அந்தப் பெண்களுடன் சேர்ந்து ஆபாச நடனம் ஆட ஆரம்பித்தார். ஒரு காவலர், பொது இடத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

அஜய்குமார் மேடையில் ஆபாச நடனம் ஆடியதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் சிலர், உடனடியாக அந்தக் காட்சிகளைத் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர். அந்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர்.

பகீர் வீடியோ... அரசுப்பள்ளியில் பெண்கள் ஆபாச நடனம்.. மது விருந்துடன் எல்லை மீறிய நிகழ்ச்சி!

சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ வெகு விரைவிலேயே வைரலாகப் பரவத் தொடங்கியது. இந்தக் காணொளியைக் கண்ட போலீஸ் உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காவல்துறையின் ஒழுக்கம் மற்றும் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் அஜய்குமார் நடந்து கொண்டதைக் கண்டிக்கும் விதமாக, உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

அஜய்குமார் ஏற்கனவே கடந்த காலங்களிலும் இதே போலப் பல ஆபாச நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறையில் பணியாற்றும் ஒருவரே இதுபோன்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!