24 மணி நேரக் காத்திருப்புக்கு பின் தரிசனம்!! ஏழுமலையானை காண குவியும் பக்தர்கள் கூட்டம்!!

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருடம் 365 நாட்களும் பக்தா்கள் கூட்டம் அலைமோதும். பல மணி நேரம் காத்திருந்து பெருமாளை தரிசித்து செல்வர். நேற்றைய நிலவரப்படி மார்ச் 14 செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்திற்காக 24 மணி நேரம் காத்திருந்தனா். கடந்த சில நாட்களாகவே திருப்பதிக்கு வரும் பக்தா்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை காலை 5 காத்திருப்பு அறைகளில் தா்ம தரிசனத்திற்காக காத்திருந்தனா். அவா்களுக்கு 24 மணிநேரம் காத்திருப்பிற்கு பின்பு டோக்கன்கள் வழங்கப்பட்டன. மார்ச் 13ம் தேதி திங்கட்கிழமை நாள் முழுவதும் 68,365 பேர் தரிசனம் செய்தனா். 27,818 பேர் முடிகாணிக்கை செலுத்தினா்.
திங்கட்கிழமை மட்டும் உண்டியல் காணிக்கை ரூ.5.65 கோடி. தினசரி உண்டியல் வருவாய் தினசரி 2 முதல் 3 கோடி வரை வசூலாகி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் உண்டியல் இந்த வருவாய் ரூ.3 கோடி முதல் 4 கோடி வரை அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க