ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தரிசனம்... திருவொற்றியூா் ஆதிபுரீஸ்வரா் வெள்ளிக் கவசம் திறப்பு!

 
திருவொற்றியூா் ஆதிபுரீஸ்வரா் வெள்ளிக் கவசம்

திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜர் கோயிலில் உள்ள ஆதிபுரீஸ்வரா் மீது மூடப்பட்டிருக்கும் வெள்ளிக்கவசம், ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வாக நேற்று டிசம்பர் 4, வியாழக்கிழமை திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளை ஒட்டி மூன்று நாட்களுக்கு மட்டுமே இந்த வெள்ளிக் கவசம் திறக்கப்படும்.

திருவொற்றியூா் ஆதிபுரீஸ்வரா் வெள்ளிக் கவசம்

சுயம்புவாக உருவானதாகக் கருதப்படும் ஆதிபுரீஸ்வரா், ஆண்டு முழுவதும் வெள்ளிக் கவசத்தால் மூடப்பட்டே பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார். நேற்று மாலை 6.30 மணிக்கு வெள்ளிக் கவசம் திறக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு 8 மணிக்குத் தியாகராஜ சுவாமி மாட வீதியுலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வெள்ளிக் கவசம் திறந்த நிலையில் உள்ள ஆதிபுரீஸ்வரரை, இன்று மற்றும் நாளை பக்தர்கள் தரிசிக்கலாம்.

திருவொற்றியூா் ஆதிபுரீஸ்வரா் வெள்ளிக் கவசம்

இன்று வெள்ளிக்கிழமை டிசம்பர் 5ம் தேதி மற்றும் சனிக்கிழமை (டிசம்பர் 6) ஆகிய இரு நாட்களும் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த நாள்களில் ஆதிபுரீஸ்வராருக்குப் புணுகு சாம்பிராணி தைல அபிஷேகம் மற்றும் மஹா அபிஷேகம் செய்யப்படும். சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறும் அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு வெள்ளிக் கவசம் மீண்டும் மூடப்படும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!