சாம்பல் கொள்ளைக்காரி குசுமா மரணம்... பூலான் தேவியைத் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டவர்!

உத்திரப்பிரதேச மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு இடையே பரவியுள்ள பள்ளத்தாக்கு சம்பல் பள்ளத்தாக்கு. இந்தப் பள்ளத்தாக்கு பொதுவாக கொள்ளை, கடத்தல் கும்பல்களின் கூடாரமாக உள்ளது. இந்த சம்பல் பள்ளத்தாக்கில் மிகப்பெரிய கொள்ளை கும்பலில் முக்கிய பங்காற்றியவர் 60வயது குசுமா நைனின். இவர் 1981 லிருந்து 2004 வரை உள்ள காலகட்டத்தில் இவர் மீது 60 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் குசுமா 21 பேர் கொண்ட ராம் அஸ்ரே பக்கா கும்பலின் முக்கிய உறுப்பினராக இருந்தார். தாகூர் ஆதிக்கம் நிறைந்த கிராமத்தில் விக்ரம் அல்லா கும்பலை சேர்ந்த பூலான் தேவி 22 பேரை கொலை செய்ததற்கு பழிவாங்கும் வகையில் அஷ்டா கிராமத்தில் உள்ள 15 மல்லாக்களை சுட்டு கொலை செய்தார் குசுமா. இதன் மூலமாக இவரது பெயர் வெளியில் தெரியத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து 7 ஆண்டாக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குசுமா எட்டாவா சிறையில் காசநோய் முற்றிய நிலையில் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை மார்ச் 3ம் தேதி உயிரிழந்தார். இவரது இறுதிச் சடங்கு அவரது கணவர் கேதார் என்பவரின் வீட்டில் காவல்துறைகளின் பாதுகாப்போடு நடந்து முடிந்தது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!