நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்!! பரபரக்கும் பாலிவுட் வட்டாரம்!!

 
சல்மான்கான்

பாலிவுட் நட்சத்திரங்களில் முண்ணனி கதாநாயகன்களில் ஒருவர் நடிகர் சல்மான்கான். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 9 மணிக்கு மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பேசிய மர்ம நபர் தன் பெயர் ராக்கிபாய்.  ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் இருந்து பேசுகிறேன். ஏப்ரல் 30ம் தேதி நடிகர் சல்மான் கான் கொலை செய்யப்படுவார் என மிரட்டல் விடுத்து உள்ளார். 

சல்மான்கான்
இந்த தகவலால் மும்பை முழுவதும் பெரும் பரபரப்ப்பு தொற்றிக் கொண்டது.  காவல்துறையினர் தனிப்படை அமைத்து  தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர். இதனிடையே மும்பை பாந்திரா பகுதியில் வசித்து வரும் சல்மான் கான் அலுவலகத்திற்கு  மார்ச் 18ம் தேதி ரோகி கார்க் என்பவரிடம் இருந்து இ-மெயில் ஒன்று வந்தது. அந்த இ-மெயிலில் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டு இருந்தது.

போலீஸ்

அதில், சமீபத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் செய்தி சேனலுக்கு கொடுத்த பேட்டியை சல்மான்கான் பார்க்க வேண்டும். கோல்டி பாய் (கோல்டி பிரார்) இந்த பிரச்சனையை முடிக்க சல்மான்கானுடன் நேருக்கு நேர் பேச விரும்புகிறார். இன்னும் நேரம் உள்ளது. நேரம் கடந்தால் நீங்கள் அதிர்ச்சியான ஒரு சம்பவத்தை பார்க்க நேரிடும் என கூறப்பட்டு இருந்தது. அடுத்தடுத்த நிகழ்வுகளால்  நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அவரது நடிப்பில் கிஸி கா பாய் கிஸி கா ஜான் என்ற படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல்  21ம் தேதி நாடு முழுவதும் வெளிவர திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web