தீட்டு என்பதால் வகுப்பறையில் அனுமதி மறுப்பு... பெண் அடிமைத்தன மனப்போக்கு... வானதி சீனிவாசன் வேதனை!

 
 தீட்டு என்பதால் வகுப்பறையில் அனுமதி மறுப்பு... பெண் அடிமைத்தன மனப்போக்கு... வானதி சீனிவாசன் வேதனை!

தமிழகத்தில் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு செங்குட்டைபாளையம் பகுதியில் செயல்பட்டு வருகிறது  சுவாமி சித்பவானந்தா மெட்ரிக் பள்ளி. இந்தப் பள்ளியில், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி  ஏப்ரல் 5ம் தேதி பூப்பெய்தினார். இந்நிலையில், முழு ஆண்டு தேர்வு நடைபெற்ற 7-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் தேர்வு எழுதுவதற்கு வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. 


மாறாக, மாதவிடாய் ‘தீட்டு’ எனக்கூறி அவரை வகுப்பறையின் படிக்கட்டில் அமரவைத்து தேர்வு எழுத வைத்ததாக பள்ளி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.  இது குறித்து   பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “நாம் என்ன கற்காலத்திலா இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? 

 தீட்டு என்பதால் வகுப்பறையில் அனுமதி மறுப்பு... பெண் அடிமைத்தன மனப்போக்கு... வானதி சீனிவாசன் வேதனை!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மாதவிடாயின் காரணமாக ஒரு மாணவியை வகுப்பறை வாசலிலேயே அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ள  சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அதுவும் “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என கற்பிக்கும்  பள்ளிக்கூடங்களில் இதுபோன்ற பெண் அடிமைத்தன மனப்போக்கு புரையோடிக் கிடப்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web