தடம் புரண்ட சரக்கு ரயில்... தண்டவாளத்தை விட்டு விலகிய சக்கரங்கள்...!

 
தடம் புரண்ட ரயில்

 திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு கோர விபத்து ஏற்பட்டது.   நேற்று டிசம்பர் 19ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து 52 பெட்டிகள் கொண்ட காலி சரக்கு ரயில் ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவுக்கு  புறப்பட்டு சென்றது.  இந்த ரயில் காட்பாடி- அரக்கோணம் வழியாக சென்று கொண்டிருந்த நிலையில்  நேற்று அதிகாலை 4.20 மணிக்கு மகேந்திரவாடி ரயில் நிலையத்திற்கு வந்தது.  

தடம் புரண்ட ரயில்

திடீரென கார்டு பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டன. இந்த விபத்தில்  ரயில் பெட்டி சிறிது தூரம் பெரும் சத்தத்துடன் இழுத்துச் செல்லப்பட்டது.
ரயில் ஓட்டுனர் சமயோசிதமாக ரயிலை நிறுத்தியதில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும்  சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்  தடம் புரண்ட ரயிலை ஆய்வு செய்தனர்.  

ரயில்

சரக்கு ரயில் லூப்லைனில் தடம் புரண்டதாக ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.    தடம் புரண்ட சக்கரங்கள் பிற்பகலில் சரி செய்யப்பட்டன.  அதன் பிறகு சரக்கு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. லூப்லைனில் இந்த ரயில் தடம் புரண்டதால் மெயின்லைனில் செல்லும் ரயில்களின் போக்குவரத்து எதுவும் பாதிக்கப்படவில்லை என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இச்சம்பவம்  குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web