குப்பையில் கொட்டப்பட்ட ஒரு டன் குல்பி ஐஸ்கிரீம்கள்!! பகீர் பிண்ணனி!!

 
குல்பி

உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ரிஜிவான் அலி மற்றும் பதுருல் ஹசன் ஆகியோர் மயிலாடுதுறை நகர் பகுதியில் உள்ள பனந்தோப்பு தெருவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து தங்கள் வீட்டிலேயே குல்பி ஐஸ்கிரீம் தயாரித்து, குடியிருப்பு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். 

குல்பி

இவர்களின் குல்பி ஐஸ்கிரீமை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாங்கி சாப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் நகராட்சி சுகாதார அலுவலர் லட்சுமிநாராயணன் தலைமையில் நகராட்சி துறை அதிகாரிகள், திடீரென ஐஸ்கிரீம் தயாரித்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

குல்பி ஐஸ்கிரீம் தயாரிக்க உரிய அனுமதி பெறாமல் இருந்ததும், சுகாதாரமற்ற முறையில் குல்பி ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு டன் குல்பி ஐஸ்கிரீம் மற்றும் ஐஸ் கட்டிகள் குல்பி ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படும் பொருட்களை நகராட்சி துறையினர் பறிமுதல் செய்தனர். 

குல்பி

மேலும், உரிய அனுமதி பெறாமல் மேற்கொண்டு குல்பி ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களை கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட குல்பி ஐஸ்கிரீம் உள்ளிட்டப் பொருட்களை நகராட்சி குப்பை கிடங்கிற்கு எடுத்துச் சென்று அழித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web