இனி விமானங்களில் ஐயப்ப பக்தர்கள் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி... மத்திய மந்திரி தகவல்!
மண்டல பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் விதமாக, விமானங்களில் புனிதமான இருமுடிப் பொருட்களை பயணிகள் தங்கள் உடனே எடுத்துச் செல்ல மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அனுமதி அளித்துள்ளது. இந்த முடிவின் மூலம், பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் மந்திரி திரு. இராமமோகன் நாயுடு அவர்கள், இது குறித்துத் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் ஓர் விடியோவை வெளியிட்டு இந்த முக்கிய அறிவிப்பை உறுதிப்படுத்தினார்.
స్వామియే శరణం అయ్యప్ప!
— Ram Mohan Naidu Kinjarapu (@RamMNK) November 28, 2025
శబరిమల పవిత్ర యాత్రలో పాల్గొనే అయ్యప్ప భక్తుల సౌలభ్యం కోసం, ఇరుముడికి ఉన్న పవిత్రత, భావోద్వేగాల్ని గౌరవిస్తూ, భక్తులు ఇరుముడి ని తమతో పాటు నేరుగా విమాన ప్రయాణంలో తీసుకెళ్లేందుకు మా పౌర విమానయాన మంత్రిత్వ శాఖ అనుమతి ఇచ్చింది అని తెలియజేయడానికి… pic.twitter.com/QT6JGV45Ng
அவர் தனது பதிவில், "புனிதமான இருமுடிப் பயணத்துடன் தொடர்புடைய பக்தர்களின் உணர்வுகளை முழுமையாக மதிக்கும் வகையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. அதன்படி, இனி ஐயப்ப பக்தர்கள் விமானப் பயணத்தின்போது, தங்கள் இருமுடியைத் தங்களுடனே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்."
பொதுவாக, விமானப் பயணத்தின்போது கொண்டு செல்லப்படும் பொருட்கள், வைக்கப்படும் பகுதியில் (Check-in baggage) வைக்கப்படும். ஆனால், இந்த அறிவிப்பின்படி, இருமுடியை அந்தப் பகுதியில் வைக்காமல், பயணிகள் பகுதியில் தங்களுடனே வைத்துக் கொள்ளும் (Cabin Baggage) வகையில் எடுத்துச் செல்லலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பக்தர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த முடிவு, அனைத்துச் சமூகத்தினரின் நம்பிக்கைகளுக்கும், உணர்வுகளுக்கும் முழு மதிப்பு அளிக்க வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. அதேவேளையில், விமானப் பயணத்தின்போது பின்பற்றப்பட வேண்டிய தேவையான அனைத்துப் பாதுகாப்பு விதிமுறைகளும் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
