குவியும் பக்தர்கள்... திணறுது மதுரை... மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

மதுரை சித்திரைத் திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மதுரை சித்திரைத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா கொண்டாடப்படும் தேதிகள் வெளியாகியுள்ளன . இப்போதிருந்தே மதுரை விழாக்கோலம் பூண தொடங்கிவிட்டது. பள்ளி விடுமுறை முடிந்து விழாவை காண குடும்பத்துடன் மதுரையில் குவிந்து வருகின்றனர்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை மீனாட்சி திருக்கல்யாண வைபவமும், வைகையாற்றில் அழகர் எழுந்தருளும் வைபவமும் பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விழாவை நேரில் காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் கூடுவர்.
இந்நிலையில் இந்த ஆண்டு வைகையாற்றில் கள்ளழகா் இறங்கும் நிகழ்வு வரும் மே 12 ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது.
இந்த விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், உள்ளூர் மக்களும் திருவிழாவில் கலந்துக் கொள்ளும் விதமாக மே 12ம் தேதியன்று நாள் முழுவதும் மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பிறப்பித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!