பக்தர்கள் அதிர்ச்சி... அமிர்தசரஸ் பொற்கோயிலில் புகுந்து இரும்பு கம்பியால் பக்தர்களை தாக்கிய மர்மநபர்!
பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்குள் புகுந்து, மர்மநபர் இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகப் பழமையான குரு ராம் தாஸ் விடுதிக்குள் இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த கொடூரத் தாக்குதலில் 3 பக்தர்களும், 2 சேவகர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் காயமடைந்த பதிண்டாவைச் சேர்ந்த ஒரு சீக்கிய இளைஞரின் நிலை மோசமாக இருப்பதாகவும், தற்போது அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், தாக்குதல் நடத்திய நபருடன் வந்த இரண்டாவது குற்றவாளி உளவு பார்த்ததாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்திய ஒரு நபரையும், அவருடன் வந்த நபரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் எதற்காக தாக்குதல் நடத்தினார் எனவும், அவர் யார் எனவும் அடையாளம் காணப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், பொற்கோயிலை நிர்வகிக்கும் ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு, இது ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி எனவும், காவல் துறையினர் இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
