அதிகாலையில் குவிந்த பக்தர்கள்... தங்க கவசத்தில் 100008 வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர்!
இன்று மார்கழி மாத மூல நட்சத்திரம் அமாவாசை. இன்று அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட உள்ள நிலையில், அதிகாலை 5 மணிக்கு, 100008 வடைகளுடன் மாலை சாற்றப்பட்டுள்ளது. 1,00,008 வடை மாலையுடன் ஓங்கியுயர்ந்து கம்பீரமாக நிற்கும் ஆஞ்சநேயரை தரிசிக்க அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நாமக்கல்லில் குவிந்தனர். இன்று மதியம் அனுமன் ஜெயந்தியையொட்டி தங்க கவசம் அணிவிக்கப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நகரின் மத்தியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் நடைபெறுகிற அனுமன் ஜெயந்தி விசேஷமானது.

மார்கழி மாத அமாவாசை தினத்தில் மூல நட்சத்திர தினத்தில், சுசிந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலைப் போலவே நாமக்கல் ஆஞ்சநேயரை வழிப்பட இந்த அனுமன் ஜெயந்தி நாளில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிவார்கள்.
இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 100008 வடைகளால் ஆன மாலை சாற்றப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்த வடை மாலை அலங்காரத்துடன் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். வடைமாலை அலங்காரத்தைக் காண நாமக்கல் மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

இன்று மதியம் 1 மணிக்கு ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட உள்ளது. அதன் பின்னர் ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்ட வடைமாலையில் இருந்து 100008 வடைகளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
