பயங்கரம்... இரு கார்கள் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 7 பேர் பலி!

திருநெல்வேலியில் வசித்து வருபவர் மாரியப்பன். கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவர் மனைவி, மகன்கள் உட்பட 9 பேருடன் மதுரையில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டார். இன்னோவா காரில் மீண்டும் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
மாலை 4 மணிக்கு உணவு உண்ட மயக்கத்தில் மாரியப்பன் காரை ஓட்டி வந்தார் . கார் வள்ளியூர் அருகே தளபதிசமுத்திரம் கீழூர் பகுதியில் உள்ள பாலம் இறங்கியதும் வரும் சாலை வளைவில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிய இன்னோவா கார் சென்டர்மீடியனில் மோதி எதிர்புறம் சாலைக்கு பாய்ந்தது.
அந்த சாலையில் வந்து கொண்டிருந்த ஸ்விஃப்ட் டிசைர் கார் மீது இன்னோவா கார் பயங்கரமாக மோதிவிட்டது. மோதிய வேகத்தில் எதிரே வந்த நெல்லை பாளையங்கோட்டையை அடுத்த டக்கரம்மாள்புரத்தைச் சேர்ந்த தனிஸ்லாஸ், அவரது மனைவி மார்கரெட் மேரி, மகன் ஜோபர்ட், இவரது மனைவி அமுதா மற்றும் இவர்களது குழந்தைகள் ஜொகனா, ஜொகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர்.
இந்த கோர விபத்தில் மாரியப்பனுடன் காரில் பயணம் செய்த மில்கிஸ் என்பவரும் உயிரிழந்தார். மொத்தம் 7 உயிர்களை பலி கொண்ட விபத்தில் ஸ்விஃப்ட் டிசைர் காரில் பயணித்த ஜோகனா என்ற இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை அடுத்து விரைந்து வந்த போலீசார் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் உதவியுடன் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் மாரியப்பனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 120 கிலோ மீட்டர் வேகத்தில் வந்ததாகவும், அப்போது தூக்க கலக்கத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறமாறாக ஓடி எதிர்புறம் சென்றுக்கொண்டிருந்த கார் மீது மோதியதாக தெரிவித்தார். மேலும் உயிரிழந்த 7 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!