இன்று முதல் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை!!

 
2020-21 – ஆம் கல்வியாண்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9ஆம் வகுப்பு மதிப்பெண்ணின் தர வரிசை அடிப்படையில் மாணாக்கர் சேர்க்கை

தமிழகத்தில்  2022-23ம் ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்   மே 8ம் தேதி வெளியிடப்பட்டன. இதன் பிறகு உயர்படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பித்தனர்.   தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  இளநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.  அதன்படி, மாணவர்கள் www.tngasa.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க தொடங்கினர்.   மே 8ம் தேதி  முதல்  மே 22ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1,07, 299 இடங்களில் சேர 2,46, 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களில், மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டவர்.

exam தேர்வு மாணவிகள் பரீட்சை கல்லூரி

அதன்படி, சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் விளையாட்டு வீரர்கள் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு மே 29ம் தேதி முதல் 31 ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டது.  ஜுன் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், ஜுன் 12 முதல் ஜுன் 30ம் தேதி வரை 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.  கல்லூரிகளில் 84,899 மாணவ மாணவியர்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் அரசுப் பள்ளிகளில் படித்து புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 23,295 மாணவிகளும் அடங்குவர். இதில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று ஜூலை 3ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.   காலியாக உள்ள இடங்களுக்கு இன்று  ஜூலை 4ம் தேதி செவ்வாய்க்கிழமை  முதல் மறுபடியும் இனசுழற்சி அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும். அதே நேரத்தில்  இன்று ஜூலை 4ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், நாளை ஜூலை 5ம் தேதி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 6ம் தேதி ஆதிதிராவிடர் வகுப்பினருக்கும், ஜூலை 7ம் தேதி அனைத்து பிரிவினருக்கும் நேரடியாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பொறியியல் கல்லூரி

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்றுமுதல் நேரடி மாணவர் சேர்க்கையும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்  'தமிழகத்தில் உள்ள மொத்தம் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் ஜூலை 7ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளில் 1,07,299 இடங்கள் காலியாக உள்ளன. அதில் 84899 மாணவர்கள் ஜூன் 30ம் தேதி வரை சேர்க்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில்   ஜூலை  4ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web