அக்கா , தம்பி கூட்டணியில் வியாபாரி அடித்துக் கொலை!! அதிர்ச்சி பிண்ணனி!!

 
தேவி

சென்னை பாடிகுப்பம் பகுதியை சேர்ந்த தேவி (48), இவரது சகோதரர் பெருமாள் (44) ஆகிய இருவரும் சேர்ந்து கோயம்பேடு மார்க்கெட் அருகே சாலையோரத்தில் காய்கறி கடை நடத்தி வந்தனர். அதே பகுதியை சேர்ந்தவர் பாரதி (42) என்பவரும், அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வைத்தார். 

அருகருகே இரண்டு காய்கறி கடை இருந்ததால் அவர்களுக்கு புகைச்சல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி நடைபாதையில் கடை நடத்துவது தொடர்பாக தேவி, பாரதி இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த தேவி, பெருமாளுடன் சேர்ந்து, பாரதியை சரமாரியாக தாக்கியுள்ளார். 

கட்டையால் அடித்து கொலை

இதில், தலையில் படுகாயம் அடைந்த தேவி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். தகவலறிந்த கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று, பாரதியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவி, பெருமாள் ஆகிய இருவரையும் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். இதனிடையே, மருத்துவமனையில் பாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தேவி

சாலையோரம் மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் நடத்துவது தொடர்பாக வியாபாரிகளிடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. அதுபோன்ற ஒரு மோதல் தற்போது கொலையில் முடிந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web