கொடூரம்... ஆடு ,கோழி மேய்ப்பதில் தகராறு... தம்பதியினரை வெட்டிக் கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர்!

 
பழனிச்சாமி

 தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி  ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர் 95 வயது  பழனிச்சாமி.  இவர் தனது இரண்டாவது மனைவி 75 வயது பர்வதத்துடன்  வசித்து வருகிறார். பழனிச்சாமிக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.  அவர்கள் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். இதனால், முதியவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தோட்டத்து வீட்டில் பழனிச்சாமி மற்றும் பர்வதம் தம்பதியர் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக அக்கம் பக்கத்தினர்  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.   

பழனிச்சாமி
இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பழனிச்சாமியின் வீட்டிற்கு பக்கத்து தோட்டத்தில் வசித்துவரும் உறவினர்  43 வயது ரமேசுக்கும்  பழனிச்சாமிக்கும்  இடையே ஆடு மற்றும் கோழிகள் வேலி தாண்டி வருவது குறித்து பல மாதங்களாக பிரச்சனை நீடித்து வருகிறது.  இதனால், அடிக்கடி சண்டையும் நடந்து வந்துள்ளது. இதே போல நேற்றும் சண்டை நடந்துள்ளது.  

பழனிச்சாமி
    
இதையடுத்து ஆத்திரத்தில்  ரமேஷ், வீடு புகுந்து பருவதத்தை அரிவாலால் வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த  பழனிச்சாமியையும் கழுத்து மற்றும் காது அருகே வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து இருவரும் உயிரிழந்துள்ளனர். உடனே  ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.  ரமேஷ் ஓடுவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தற்போது ரமேஷை கைது செய்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரத்தில்  கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web