14 மாத பெண்குழந்தை பலி!! குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை முயற்சி!!

 
சத்யா

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கிழக்குபதனவாடி கிராமத்தில் சிவக்குமார் (30), சத்யா தம்பதி வசித்து வந்தனர். 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சிவக்குமார்- சத்யா தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

சத்யா

இதனால் சத்யா அடிக்கடி கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவரது பெற்றோர்கள் சத்தியாவை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் கணவன், மனைவிக்குள் குடும்ப பிரச்சினை முற்றிப் போகவே, மீண்டும் சத்யா தனது மூத்த மகளை அழைத்துக் கொண்டு ஜல்லியூரில் வசித்து வரும் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் விரக்தி அடைந்த சிவகுமார், தன்னுடன் இருந்த இரண்டு பெண் குழந்தைக்கு பாலில் விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

சத்யா

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் மயங்கிய நிலையில் இருந்த இரண்டு குழந்தைகள் மற்றும் சிவக்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரு வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மற்றொரு பெண் குழந்தை மற்றும் தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web