கருப்பு உடையணிந்து திமுக கூட்டணி எம்பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம்!

இந்தியாவில் பட்ஜெட் தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெற்றது. இந்நிலையில், 2வது அமர்வு தொடங்கிய நிலையில் 24 நாட்கள் இடைவெளிக்குபின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு தொடங்கியது. அவை தொடங்கியதும் திமுகவினர் மும்மொழி கொள்கை விவகாரத்தை எழுப்பினர்.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்து பேசினார். அப்போது தமிழக எம்.பிக்களை தர்மேந்திர பிரதான் நாகரீகமற்றவர்கள் என பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, மதிமுக எம்.பி. வைகோ, விசிக எம்.பி. திருமாவளவன் ஆகியோர் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!