‘அதிகாரப் பகிர்வு’ ... திமுகவுக்கு காங்கிரஸ் நெருக்கடி!
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதே மறைந்த கருணாநிதியின் நிலைப்பாடு. ஆனால் 1967க்கு பிறகு 58 ஆண்டுகள் ஆனாலும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து ஆட்சியை பிடிக்க முடியவில்லை. திமுக, அதிமுக கூட்டணிகளோடு தான் தேர்தலை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய மாற்று சக்தி களத்தில் உள்ளது. அதன் தலைவர் விஜய், கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனால், இந்த முறை ஆட்சியில் பங்கு கோஷத்தை விடக்கூடாது என காங்கிரஸ் கருதுகிறது.

இதையே வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை என்றும், இப்போது அதிகாரம் மட்டுமல்ல அதிகாரப் பகிர்வும் பேச வேண்டிய காலம் வந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
