ஆபாச வார்த்தை.. திமுக நிர்வாகி வன்கொடுமை சட்டத்தில் கைது!

 
police

சேலம் மாவட்டம் சிவதாபுரம் அடுத்த திருமலைகிரி ஊராட்சி பகுதியில் அறநிலையத் துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த வியாழக்கிழமை கோவில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த பட்டியலினப் பிரிவை சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் கோயிலுக்குள் சென்றுள்ளார்.

இதனை அறிந்த திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான மாணிக்கம், அடுத்த நாள் காலையில், பிரவீன் மற்றும் அவரது தாய் தந்தை அனைவரையும் ஊர் பொதுமக்கள் மத்தியில் நிற்க வைத்து அநாகரிமாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளார் .இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . 

இந்நிலையில் திமுக தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், சேலம் கிழக்கு மாவட்டம் சேலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மாணிக்கம் அவர்கள் கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவர் பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

action

இதுகுறித்த புகாரில், சேலம் இரும்பாலை காவல்துறையினர், ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்தை கைது செய்தனர். இந்த தகவலை அறிந்த அவரது ஆதரவாளர்கள் இரும்பாலை காவல் நிலையம் முன்பு திரண்டு காத்திருந்தனர். மாணிக்கத்தை  காவல்துறையினர் அழைத்து செல்வதை அறிந்த ஊர் மக்கள் சாலையில் திடீரென அமர்ந்து காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்டனர்.

இதனை அடுத்து அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  பெரும் போராட்டத்திற்கு பிறகு காவல்துறையினர் அவரை இரும்பாலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதனை அடுத்து மாணிக்கத்தின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது . 
action

இதனையடுத்து சேலம் மாநகர காவல்துறை இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, சேலம் மாநகர D4 இரும்பாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலைகிரி கிராம பஞ்சாயத்தில் உள்ள பெரியமாரியம்மன் கோவில் பண்டிகையின் போது அதே ஊரில் குடியிருக்கும் (இந்து ஆதிதிராவிடர்) வகுப்பைச் சேர்ந்த பிரவின்குமார் த.பெ.செந்தில் என்பவர் 26.01.2023ம் தேதி இரவு 08.30 மணியளவில் மேற்படி கோவிலுக்குள் சென்று வழிபட்டுவிட்டு வந்துள்ளார்.

அவரை 27.01.2023ம் தேதி அன்று காலை திருமலைகிரி கிராம பஞ்சாயத்து தலைவர் திரு.மாணிக்கம் (இந்து வன்னியர்) மேற்படி கோவிலுக்குள் நுழைந்த காரணத்தினால் பிரவின்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முற்ப்பட்டதாக பிரவின் குமார் கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு புலன்விசாரணை செய்து மாணிக்கம் என்பவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இது போன்று தவறுகள் யார் செய்தாலும் காவல் துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும், என சேலம் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web