பெண்ணை காலணியால் தாக்கிய திமுக நிர்வாகி கணவர் அதிரடி கைது !!

 
தீபாலட்சுமி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி ஜோதிபுரம் பகுதியில் சுவாமிநாதன்(56)- தீபாலட்சுமி தம்பதி வசித்து வருகின்றனர். இதில் தீபாலட்சுமி பேராவூரணி வடக்கு ஒன்றிய திமுக மகளிரணி அமைப்பாளராக உள்ளார். 

இந்நிலையில், குறிச்சி மாரியம்மன் கோயில் பகுதியில், பழங்குடியின பெண்கள் சிலர் பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பாட்டில்களை சேகரித்தனர். அப்போது அங்குவந்த சுவாமிநாதன், இது தமக்கு சொந்தமான இடம், இங்கு குப்பைகளை சேகரிக்கக்கூடாது என அப்பெண்களை திட்டியுள்ளார். 

தீபாலட்சுமி

மேலும் பொருட்களை திருடி செல்வதாக கூறி அந்த பெண்ணை தரக்குறைவாக பேசி, அவர்கள் சேகரித்து வைத்திருந்த  பொருட்களை பிடுங்கி கீழே கொட்டுயுள்ளார். பின்னர் இந்த இடத்தைவிட்டு வெளியேறும்படி கூறி இரு பெண்களில் ஒருவரை செருப்பால் தாக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தீபாலட்சுமி

சுவாமிநாதனின் இந்த செயலுக்கு பலரும் அதிருப்தியையும், கண்டனத்தையும் பதிவு செய்தனர். இதனையடுத்து, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் உத்தரவுப்படி வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து  சுவாமிநாதனை கைது செய்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web