இளம் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த திமுக பிரமுகரை தட்டி தூக்கிய காவல்துறை!!

 
ரம்யா

திண்டுக்கல்  மாவட்டம் கொடைக்கானல்  அன்னை தெரசா நகரில் ராஜேஷ்குமார்- ரம்யா தம்பதி வசித்து வருகின்றனர். ராஜேஷ் குமார் வீட்டிற்கு அருகில் வளன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த வளன் திமுக பிரமுகராவார். இவரது எதிர் வீட்டில் வசிக்கும் ராஜேஷ் குமாரின் மனைவி ரம்யாவிடம் வளன் வாட்ஸ்அப் காலில் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

ரம்யா

ஒரு கட்டத்தின்  வாட்ஸ்அப் காலில் பேசி தொந்தரவு செய்து வந்ததுடன், பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது பற்றி ராஜேஷ் குமாரும், அவரது மனைவி ரம்யாவும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு திமுக பிரமுகர் வளன் கணவன் மனைவி இருவரையும் திட்டியதுடன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். 

ரம்யா

இதனால் அமைச்சமடைந்த ராஜேஷ் குமார், மிரட்டல் குறித்து வளன் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை வாட்ஸ்அப் காலில் பேசி பணம் கேட்டு மிரட்டிய திமுக பிரமுகர் வளணை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web