திமுக எம்.எல்.ஏ. நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு! கலவர பூமியாக மாறுகிறதா தமிழகம்?

 
ஐயப்பன்

தமிழகம் கலவர பூமியாக மாறி வருகிறதா என்கிற அச்சமும்,  பதற்றமும் பொதுமக்களிடையே ஏற்பட்டு வருகிறது. பாமக பிரமுகர்கள் அடுத்தடுத்து செங்கல்பட்டு, கடலூர் போன்ற பகுதிகளில் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், ஆளும் திமுக எம்.எல்.ஏ. கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன். கடலூரில் உள்ள திமுக பிரமுகர் ஒருவரின் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக, எம்.எல்.ஏ., அய்யப்பன் சென்றிருந்த நிலையில், விசேஷ வீட்டை அடைந்ததும் எம்எல்ஏ காரிலிருந்து இறங்கி உள்ளே சென்ற போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.  அதிர்ஷ்டவசமாக திமுக எம்எல்ஏ  அய்யப்பன் உயிர்த்தப்பினார்.  நேற்று திமுக நிர்வாகியின் இல்ல விழாவில்  பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அடுத்து அந்த பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஐயப்பன்

அத்துடன்  பெட்ரோல் குண்டு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  அத்துடன் கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

பெட்ரோல் குண்டு

குண்டு வீசிவிட்டு தப்பி ஓடியவர்களை சுற்றி வளைக்க   5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நல்லாத்தூர் பகுதியில் நடந்த குண்டு வீச்சு  குறித்து 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  புதுச்சேரி எல்லைப் பகுதி என்பதால் இச்சம்பவம் குறித்து புதுச்சேரியிலும்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web