அமெரிக்கா அலெர்ட்... ஜம்மு – காஷ்மீருக்கு போகாதீங்க... உதவி எண்கள் அறிவிப்பு!

இந்தியாவில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 22 ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் திடீரென நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை முதன்மையாக நடத்தி வருகிறது.
இந்நிலையில், தற்போது அமெரிக்க அரசு ஜம்மு – காஷ்மீர் பகுதிகளுக்கு பயணிக்க வேண்டாம் என மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கும் அறிவிப்பின் படி “அமெரிக்க குடிமக்கள், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதைப்போல, பயங்கரவாத அச்சுறுத்தல் உயர்ந்திருக்கும் பகுதிகளான பஹல்காம், குல்மார்க், மற்றும் எல்லைப் பகுதிகளுக்கு செல்வதை கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள்.
இந்தியா-பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் இந்தியா-சீன எல்லைப் பகுதிகளில் ராணுவ மோதல்கள் மற்றும் வன்முறை அபாயம் உள்ள காரணத்தால் மக்கள் பாதுகாப்பாக இருங்கள் எனவும், அங்கு பயணம் அவசியமாக இருந்தால், உள்ளூர் நிலைமைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், அமெரிக்க தூதரகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, அமெரிக்க தூதரகம் அவசரகாலங்களில் உதவுவதற்காக 24 மணி நேரமும் இயங்கும் தொடர்பு வசதியை வழங்கியுள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தொடர்பு விவரங்கள்:
முகவரி: U.S. Embassy New Delhi, Shantipath, Chanakyapuri, New Delhi – 110021, India
தொலைபேசி எண்: +91-11-2419-8000 (இந்தியாவிலிருந்து அழைக்கும்போது 011-2419-8000; அமெரிக்காவிலிருந்து அழைக்கும்போது 011-91-11-2419-8000)
தொலைநகல் (Fax): +91-11-2419-0017
மின்னஞ்சல்: acsnd@state.gov (அமெரிக்க குடிமக்கள் சேவைகள் தொடர்பான கேள்விகளுக்கு)
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!