மக்களே உஷார்... பொது இடங்களில் Wi-Fi சேவையில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்யாதீங்க… மத்திய அரசு எச்சரிக்கை!

 
வைபை
 


 
இந்தியா முழுவதும் ரயில்நிலையங்கள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் உட்பட பல பொது இடங்களில் வைபை சேவை வழங்கப்பட்டுள்ளது.  இது குறித்து மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பொது இடங்களில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது பொது வைபை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளது.  இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்து வட்ட நிலையில் பெரிய கடைகள் முதல் சிறிய வணிக வியாபாரிகள் வரை ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.  

வைபை
இது பொதுமக்களுக்கு மிகவும் எளிதாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் பொது இடங்களில் அதாவது விமான நிலையங்கள், ஹோட்டல்கள் உட்பட பல்வேறு இடங்களில் பொது வைபை சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இது உங்களின் தனிப்பட்ட மற்றும் நிதி சேவைகளுக்கு ஆபத்தாக இருக்கலாம். இதன் காரணமாக பொது வைபை வசதியை பயன்படுத்தி ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை செய்யக்கூடாது.

மத்திய அரசு

இதனை பயன்படுத்தி ஹேக்கர்கள் எளிதாக மோசடி செய்வார்கள். இதுபோன்று பொது இடங்களில் வைஃபை சேவையை பயன்படுத்தி ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.  இது போன்ற மோசடிகளில் இருந்து தற்காலத்துக் கொள்ளும் வழிமுறை என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web