“ஓபிஎஸ் செய்வது கட்சியின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல” ராஜன் செல்லப்பா
தமிழகத்தில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் கிராமத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற திண்ணை பிரச்சாரத்தில் மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா, “எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது செல்வாக்கை இழந்துள்ள ஓபிஎஸ் அதிமுகவிற்கு எந்தவித இடையூறும் இல்லாமல் 6 மாத காலம் அமைதியாக இருந்தால் வரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வது குறித்து தாங்கள் கழகப் பொதுச் செயலாளர் இபிஎஸ் பேசி நடவடிக்கை எடுப்போம். அதிமுகவிற்கு 2026ம் ஆண்டு வலிமையான எதிர்காலம் தெரிவித்துள்ளது.

அதிமுக இரட்டை தலைமையாக இருந்த போதும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. தற்போது ஒற்றை தலைமையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறோம். அதிமுகவில் எந்தவித நிபந்தனையும் இன்றி இணைய ஓபிஎஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். பல்வேறு இடையூறுகளை அளித்து ஓபிஎஸ் போன்றோர் தொடர்ந்து அதிமுகவுக்கு துரோகம் இழைத்து வருகின்றனர். அது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுவது கட்சியின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. மூத்த உறுப்பினர்கள் இதுபோன்று செயல்படுவது அழகல்ல” என கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
