சமயபுரம் கோவிலுக்கு 1 ஏக்கர் நிலம் தானம்... கருணை காட்டிய எம்.எல்.ஏ., கதிரவன்!

 
சமயபுரம் திருச்சி

சட்டசபையில் நேற்று மண்ணச்சநல்லுார் தொகுதி எம்எல்ஏ கதிரவன் பேசிய பொழுது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டாலும் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட கோயில்களில் பல திருப்பணிகள் நடந்துள்ளன. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடந்து வரும், நாள் முழுவதும் அன்னதானத் திட்டத்தால் 5 ஆயிரம் பேர் வரை தினமும் பயனடைகின்றனர்.

சமயபுரம் கோயிலில் மேற்கொள்ள இருக்கும் மேம்பாட்டு பணிக்காக அரசு ரூபாய் 60.43 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. சமயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் இல்ல திருமணவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை சமயபுரம் "மாரியம்மன்" முன்னிலையில் நடத்த விரும்புகின்றனர்.

நேரு மகன்

இதனை பூர்த்தி செய்யும் வகையில் குறைவான கட்டணத்தில் இந்து சமய அற நிலையத்துறை சார்பாக திருமண மண்டபம் கட்டித் தரவேண்டும் என்ற எனது எண்ணத்தை தனலட்சுமி சீனிவாசன் குழும நிறுவன தலைவரும் என் தந்தையுமான சீனிவாசனிடம் தெரிவித்தேன். அவர் மண்ணச்சநல்லூர் தொகுதி மக்கள் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் பயன்பெற வேண்டும் எனக் கூறி கோயிலுக்கு மிக அருகில் அவரது பெயரில் உள்ள 1 ஏக்கர் நிலத்தை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தானமாக வழங்க முன்வந்துள்ளார். 

தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இதனை ஏற்று அந்த இடத்தில் திருமண மண்டபம் கட்டித்தர முன்வர வேண்டும். சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தங்கும் விடுதி (யாத்ரி நிவாஸ்), பெருந்திட்ட வளாகத்தில் கோயிலுக்கு தேவையான பிரசாதங்கள் தயாரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும். திருப்பைஞ்ஞீலி நீலிவனேஸ்வரர் கோயிலுக்கு திருமண மண்டபம், தங்கும் விடுதி, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு திருமண மண்டபம், தங்கும் விடுதி மற்றும் புதிய தேர் அமைத்து தர அமைச் ர் சேகர்பாபு முன்வர வேண்டும். எம்.ஆர்.பாளையத்தில் 63 ஹெக்டர் பரப்பளவில் 2009ம் ஆண்டு காப்பு காட்டில் வன உயிரின பூங்கா ஆரம்பிக்கப்பட்டது.

திருச்சி கதிரவன் எம்.எல்.ஏ.,

இப்பூங்காவை மேம்படுத்தி அய்யாறு மற்றும் சித்தாம்பூர் ஏரி பொது கரையை நிரந்தரமாக பலப்படுத்த வேண்டும். சித்தாம்பூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என அடுக்கிக் கொண்டே போனார்.

அட நம்ம எம்.எல்.ஏ.,வா இப்படி? பகுத்தறிவு பகலவன் ஆச்சே? திடீரென ஏன் இவ்வளவு திட்டம்? ஒருவேளை அமைச்சர் நேரு மகன் அருணுக்கு பதிலா இவரே வரும் நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்கப் போகிறாரோ என தொகுதி மக்கள் வாய்பிளக்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

 

From around the web