சனிக்கிழமைகளில் இதை தானம் செய்து பாருங்க… அப்புறம் தொட்டதெல்லாம் வெற்றி தான்!

 
தானம் தானம்

ஓவ்வொரு கிழமைக்கும் ஒரு விசேஷம் உண்டு. சனிபகவானுக்கு உகந்த தினமான க்கிழமைகளில் இதை தானம் செய்து பாருங்க. உங்க வாழ்வில் மாற்றத்தை உணர்வீங்க. உலகில் ஒவ்வொருவரும் அவர்களால் இயன்ற அளவு இயலாதவர்களுக்கு தானம் செய்ய வேண்டும் என அனைத்து மதங்களும் கூறுகின்றன. அந்த வகையில் தானத்தில் எது மிகச் சிறந்தது என்பதற்கு நாம் எதை உண்மையில் அளவுக்கு அதிகமாக விரும்புகிறோமோ அதை தானமாக வழங்க வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள்.

தேவையை அறிந்து தானம் வழங்கும் போது அவர்களின் மனம் மகிழும். அதன் மூலம் தானம் வாங்கியவர்கள் மட்டுமல்ல கடவுளும் நம்மை ஆசீர்வதிப்பார். தானத்தால் வரும் மன நிறைவு கோடிகோடியாய் சேர்க்கின்ற செல்வத்திலும் கிடைப்பதில்லை.’

சனிக்கிழமைகளில் இதை தானம் செய்து பாருங்க… அப்புறம்  எப்பவுமே வெற்றி தான்!

எந்த கிழமைகளில் எதை தானமாக கொடுக்கலாம்? என்று நமது சாஸ்திரங்கள் வகுத்து வைத்திருக்கின்றன. அதன் படி சனிக்கிழமைகளில் எண்ணெய் தானம் செய்தால், நீண்ட ஆரோக்கியமான ஆயுள் வாய்க்கப்பெறும்.

எல்லோரும் சனிக்கிழமைகளில் கையில் நல்லெண்ணையுடனும், எள்ளையும் எடுத்துக் கொண்டு சனீஸ்வரரை வழிபட கிளம்பி செல்வார்கள். இனி சனிக்கிழமைகளில் மறக்காமல் எண்ணெய் தானம் செய்து பாருங்கள். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு, இப்படி சனிக்கிழமைகளில் எண்ணெய் தானம் செய்து வந்தால், உங்கள் ஆரோக்கியம் மேம்பட்டு, துன்பங்கள் எல்லாம் துளி துளியாய் கரைந்து போவதை உணரலாம்.

சனிக்கிழமைகளில் இதை தானம் செய்து பாருங்க… அப்புறம்  எப்பவுமே வெற்றி தான்!

இந்நாளில் தான் இந்த தானம் என்பது அவசியமே இல்லை. சூரியனின் கதிர்கள் பூமியில் விழும் நேரத்தில் பகல் வேளையில் தானம் கொடுப்பது நல்லது. இதனால் கொடுப்பவர்களும், பெறுபவர்களும் புண்ணியம் பெறுவதோடு இருவருக்குமே செல்வங்களும் வந்து சேரும். அதேபோல் தரித்திரம், பயம் விலகும் . அவரே நமக்கு சாட்சியாக இருந்து சகல செளபாக்கியங்களையும் வழங்குவார் என்பது நம்பிக்கை என்கின்றனர் சாஸ்திர நிபுணர்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!