மோசடியில் ஈடுபடுபவர்களை நம்பி ஏமாறாதீங்க... நீட் தேர்வு வினாத்தாள் கசிவு புகார்களை தெரிவிக்க தனி இணையதள பக்கம்!

 
 மோசடியில் ஈடுபடுபவர்களை நம்பி  ஏமாறாதீங்க... நீட் தேர்வு வினாத்தாள் கசிவு  புகார்களை தெரிவிக்க தனி இணையதள பக்கம்!
இந்தியா முழுவதும் மருத்துவம் சார்ந்த படிப்புக்களை படிக்க நீட் தேர்வு  எழுத வேண்டியது அவசியமாகிறது. இந்நிலையில் வினாத்தாள் கசிந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு  மே 4ம் தேதி நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மாணவ,மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். 

இந்நிலையில்  2024ம் ஆண்டு நீட் தேர்வின்போது வினாத்தாள் கசிந்தது. இந்த விவகாரம் பெரும் பூதாகாரமான நிலையில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நடப்பு ஆண்டு நீட் தேர்வின்போது வினாத்தாள் கசிவு, மோசடி தொடர்பான புகார்களை தெரிவிக்க தேசிய தேர்வு முகமை புதிய இணையதள பக்கத்தை தொடங்கியுள்ளது. 

NEET.NTA.AC.IN அல்லது NTA.AC.IN இணையதளங்களின் மூலம் புகார்களை தெரிவிக்கலாம்.  புகார்களை ஆதாரத்துடன் இதில் பதிவு செய்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆசை காட்டி மோசடியில் ஈடுபடுபவர்களை நம்பி  ஏமாற வேண்டாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web