மாசி வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் இதை செய்யாதீங்க! அதிர்ஷ்டம் விலகும்!

 
மருதாணி செல்வம் அம்மன்

மாசி மாத  வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை செய்துடாதீங்க. பொதுவாவே வெள்ளிக்கிழமை அதிர்ஷ்ட தினமாகவே கருதப்படுகிறது. அதனால், எப்போதுமே வெள்ளிக்கிழமைகளில் நல்ல விஷயங்களைச் செய்ய மறந்தாலும், நிச்சயமாக அதற்கு நேரெதிரான காரியங்களை மறந்தும் செய்திடாதீங்க. அதனால் நம்மை விட்டு அதிர்ஷ்டமும், செல்வமும் விலகி போக ஆரம்பித்து விடும். மகாலட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. நம்மிடம் செல்வம் வருவதற்கும், நிரந்தரமாக தங்குவதற்கும் வெள்ளிக்கிழமைகளில் சில அடிப்படையான விஷயங்களைக் கடைப்பிடித்து வர வேண்டும்.

பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு நிரந்தரமாகவே சென்று விடுவாள் என்பது ஐதீகம்.

அதே போல நாம் வசிக்கும் வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும்.

மறந்தும் வெள்ளிக்கிழமைகளில் இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க!

வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் செய்யக் கூடாத விஷயங்கள் என்று நமது சாஸ்திரம் சில அடிப்படையான விஷயங்களை வகுத்து வைத்திருக்கிறது. இந்த விஷயங்களை எல்லாம் மறந்தும் செய்யாதீங்க… அப்படி உங்களுக்குத் தெரியாமலேயே இதையெல்லாம் நீங்க இதுநாள் வரையில் செய்து வந்திருந்தால், அதுவே கூட உங்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இத்தனைக் காலங்களும் இருந்திருக்கலாம். எவ்வளவோ சம்பாதித்தாலும், பொருள் வீடு வந்து சேரலை.. நிரந்தரமாக செல்வம் தங்காமல் கடனில் தத்தளிக்கிறேன் என்று சிலர் புலம்புவதைக் கண்டிருக்கலாம். அதற்குப் பின்னால் இந்த மாதிரியான அஜாக்கிரதை காரணங்களாக இருக்கும்.

  • வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது கூடவே கூடாது. கூடுமானவரை வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். நம்மில் நிறைய பேர் வெள்ளிக்கிழமைகளில் தான் அவசரம் என்று தலையை சொரிந்து கொண்டு, நம்மிடம் கடன் கேட்டு வந்து நிற்பதை கவனித்திருக்கலாம். அது 10 ரூபாயோ, 100 ரூபாயோ வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள்.
  • அதே போல் வெள்ளிக்கிழமைகளில் அரிசியை வறுப்பதும், புடைப்பதும் கூடாது. குறிப்பாக பச்சரிசியை வெள்ளிக்கிழமைகளில் அஜாக்கிரதையாக கையாளாதீர்கள். பச்சரிசியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
  • அப்புறம் எல்லா கிழமைகளிலுமே பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன் கொடுத்தல் இரண்டுமே கூடவே கூடாது.

மறந்தும் வெள்ளிக்கிழமைகளில் இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க!

From around the web