மிஸ் பண்ணாதீங்க... இன்று சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு!! வழிபடும் முறை, நேரம் முழு தகவல்கள்!

 
காரடையான் நோன்பு அடை

இன்று தீர்க்க சுமங்கலி வரம் தரும் காரடையான் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. பங்குனி மாதத்தின் முதல் நாள். காரடையான் நோன்பு எப்படி கடைப்பிடிப்பது? விரதம் இருக்கும் முறை? எந்த நேரத்தில் தாலி சரடை மாற்றிக் கொள்ளலாம் என்று விரிவாகப் பார்க்கலாம் வாங்க. கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியதிற்காக சுமங்கலி பெண்கள் இருக்கும் விரதமே காரடையான் நோன்பு விரதம்.மாசி மாதம் முடிந்து பங்குனி தொடங்கும் வேளையில் இந்த விரதம் மேற்கொள்ளப்பட வேண்டும். கௌரி விரதம், காமாட்சி நோன்பு எனவும் குறிப்பிடுவர். சாவித்திரி தன்னுடைய தவ வலிமையால் தன்னுடைய கணவன்  சத்தியவானின் உயிரை எடுத்து சென்ற எமனுடன் போராடி மீட்டாள் என்பது புராணக் கதை.

காரடையான்

இந்த தினத்தில் சத்தியவான் சாவித்திரி சரிதம் படிப்பவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும். கணவன் உயிரை திருப்பி கொடுத்த எமனுக்கு சாவித்திரி தன் பக்தியை நிரூபிக்க உருகாத வெண்ணெயால் செய்யப்பட்ட கார அடையை  காணிக்கையாக படைத்தாள். கார் என்றால் கருமை . அடையான் என்றால் அடைந்தவன் .கருமையான இருள் சூழ்ந்த யமலோகத்தை அடையாதவன் என்பதால்  காரடையான் நோன்பு என்ற பெயர் ஏற்பட்டது. கன்னிப் பெண்களுக்கு விரைவில் மாங்கல்ய பாக்கியம் பெறவும், சுமங்கலி பெண்கள் தீர்க்க சுமங்கலி வரம் பெறவும் இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

இந்த தினத்தில் அதிகாலையில் எழுந்து மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த புனிதநீரில்  நீராட வேண்டும். வாசலில் காவி பூசி கோலமிட வேண்டும். பூஜையறையிலும் கோலமிட்டு நித்திய பூஜைகளை செய்ய வேண்டும். பராசக்தியை நினைத்து இந்த நோன்பை அனுஷ்டிக்கலாம். இன்று பங்குனி முதல் நாள் மார்ச் 14 ம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 3.45 மணியிலிருந்து 4.14 மணிக்குள் தாலி சரடை புதிதாக மாற்றிக் கொள்ளலாம். 

காரடையான் நோன்பு அடை
கணவனின் கையால் புதிய சரடை கட்டிக் கொள்ளலாம். தங்கத்தால் தாலி சரடு அணிந்திருப்பவர்களும் கணவரின் நீண்ட ஆயுளுக்காக சிறிது மஞ்சள் கயிற்றையும் கோர்த்து அணிந்து கொள்ளலாம். மாசி சரடு பாசி படியும் என்பது முதுமொழி.  மாசி மாதத்தில் அணியும் உங்களுடைய மாங்கல்ய சரடு பாசி படியும் வரை நீடிக்கும்.  இந்த நாளில் உமையவளுக்கு விரதமிருந்து, கார அடை செய்து படைத்து வழிபாடு செய்திட வேண்டிய வரம் அருள்வாள் அன்னை பராசக்தி.இந்த விரதம் இருந்தால், திருமணமான பெண்களுக்கு தீர்க்கசுமங்கலி வரமும், திருமணமாகாத பெண்களுக்கு கூடிய விரைவிலேயே திருமண பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

சரடு கட்டிக் கொள்ள உகந்த நேரம் :

நடப்பாண்டில் காரடையான் நோன்பு  இன்று மார்ச் 15ம் தேதி புதன்கிழமை வருகிறது. இன்று காலை 06.29 மணி முதல் 06.47 மணி வரை வழிபாடு செய்து சரடு கட்டிக் கொள்ளலாம். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web