''முஸ்லிம்களையோ, காஷ்மீரிகளையோ குறி வைக்காதீங்க''... உயிரிழந்த கடற்படை அதிகாரியின் மனைவி வேண்டுகோள்!

 
 காஷ்மீர்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ குறி வைக்காதீர்கள் என்று தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வினய் நர்வாலின் 27வது பிறந்தநாளை முன்னிட்டு ஹரியானாவின் கர்னாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்த தான முகாமில் வினய் நர்வாலின் தாய் மற்றும் மனைவி ஹிமான்ஷி கலந்து கொண்டனர்.

ஜம்மு காஷ்மீர்

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வினய் மனைவி ஹிமான்ஷி நர்வால், 'அவர் எங்கிருந்தாலும், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக யாரும் செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும். அமைதி மட்டுமே வேண்டும். நிச்சயமாக எங்களுக்கு நீதி வேண்டும்," என்று கூறினார். ​

காஷ்மீர்

கூட்டத்தில் உரையாற்றிய ஒருவர், பயங்கரவாதிகள் அப்பாவி மக்களின் இரத்தத்தைச் சிந்தினாலும், இந்த இரத்த தான முகாம் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்று கூறினார். 

கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில், வினய் நர்வாலும் ஒருவர். திருமணமாகி ஒரு வார காலமே ஆன நிலையில் அவர் தனது மனைவி ஹிமான்ஷி நர்வாலுடன் பஹல்காம் பகுதிக்கு தேனிலவுக்காக சென்றிருந்த நிலையில், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web